Monday 6th of May 2024 10:52:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
காபூலில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல்!

காபூலில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல்!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ஐ.எஸ் - கே அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இலக்கு வைத்த நபரை தாக்கி விட்டதாகவே நம்புகிறோம் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ ஆரம்பகட்ட செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் தாக்குதலின் பின்பு நடந்த வெடிப்பு அந்த வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை குறிக்கின்றது என்றும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதாக காபூலில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தத் தாக்குதலால் காபூல் விமான நிலையத்துக்கு இருந்த தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டது என்று அமெரிக்கா இராணுவ அதிகாரியான கப்டன் பில் அர்பன் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல அடுத்து காபூல் விமான நிலையம் அருகே இருந்த கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதையும் அதிலிருந்து புகை வெளியேறுவதையும் காண முடிகிறது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE